இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ படையை அமைத்த சிஆர்பிஎஃப்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது. 2 அதிகாரிகள் உள்பட 30 பேர் கொண்ட இந்த படையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் போலீஸ் அகாடமியில் 3 மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களுக்கு பிணையக் கைதிகளை காப்பாற்றுவது, தீவிரவாத தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவது, பெண் வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவது, ஆபத்தான சூழ்நிலையில் செயல்படுவது, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறைவு விழாவில் பெண் கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பெண்கள் கமாண்டோ பிரிவு துவங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications