ஐஸ்லாந்து சைலன்ட், இந்தியா வயலன்ட்: கணக்கெடுப்பில் தகவல்
மும்பை: குளோபல் பீஸ் இன்டெக்ஸ்(ஜிபிஐ) கணக்கெடுப்பில் உலகின் வன்முறை நிறைந்த நாடுகளில் இந்தியா 141வது இடத்தில் உள்ளது.
குளோபல் பீஸ் இன்டெக்ஸ் உலகின் வன்முறை நிறைந்த நாடுகள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. மொத்தம் 161 நாடுகள் இந்த கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு, சமூக பாதுகாப்பின் அளவு, தேசிய, சர்வதேச பிரச்சனைகளை கணக்கில் கொண்டு நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு
கணக்கெடுப்பில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு தான் உலகிலேயே மிகவும் வன்முறை நிறைந்த நாடு என்று தெரிய வந்துள்ளது.

141வது இடத்தில் இந்தியா
அமைதியாக வாழ முடியாத நாடுகளில் இந்தியா 141வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் வன்முறைச் சம்பவங்களுக்கு 799 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் 2 பேராவது வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானும் வயலன்ட் தான்
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் வன்முறை நிறைந்த நாடுகளாம்.

ஐஸ்லாந்து சைலன்ட்
ஐஸ்லாந்து மிகவும் அமைதியான நாடு என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications