காஷ்மீர் ராணுவ முகாமில் தூக்கில் தொங்கிய தமிழக வீரர்: தொடரும் மர்மம்
ஜம்மு: நேற்று காலை தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தமிழக ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீர் மாநிலத்தில் எல்லை ஓரத்தில் தொடரும் தீவிரவாத அச்சுறுத்தலால், போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதம்பூர் மாவட்டம் ரெம்பால் பகுதியிலும் ஒரு பிரிவினர் முகாமிட்டுள்ளனர். அதில், ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில், தமிழ்நாட்டில் முட்லபூரை சேர்ந்த கே.நாகராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை நாகராஜ் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கானக் காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. நாகராஜின் தற்கொலை மர்மம் குறித்து வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப்பின்னர், நாகராஜின் உடல் அவரது சொந்த ஊருக்கு முறையான மரியாதையோடு அனுப்பி வைக்கப்படும் என, ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications