கொச்சி வந்தார் ஸ்ரீசாந்த்: எதிரிக்கு கூட என் நிலை வரக் கூடாதுங்க
கொச்சி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இன்று காலை கொச்சி வந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 27 நாட்கள் கழித்து நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை தனது சொந்த ஊரான கொச்சிக்கு வந்தார்.

அவர் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை நம்ப வேண்டும். என் எதிரிக்கு கூட என் நிலைமை வரக் கூடாது. வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. 2015ம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது என் கனவு. நான் நிரபராதி என்பதை விரைவில் நிரூபிப்பேன். ராஜஸ்தான் ராயல்ஸ், பிசிசிஐ மற்றும் கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications