ஜெயலலிதாவை சந்தித்தார் விருதுநகர் தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன்!

தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் 29.05.2013 புதன்கிழமையன்று ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்தார்.
இவர்களைத் தொடர்ந்து இன்னும் சில எம்.எல்.ஏக்கள் அதிமுகவை நோக்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
இவரும் 6 தேமுதிக எம்எல்ஏக்கள் போலவே, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தொகுதி பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு மனு கொடுத்துள்ளார். ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னும் எத்தனை எம்.எல்.ஏக்கள் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்புக் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications