துப்பாக்கில சுட்டு என்னையும் போட்டுத்தள்ள பார்த்தாய்ங்க.. : இம்ரான்கான்

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் படுத்த படியே தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று லாகூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார் இம்ரான்கான். அப்போது அவர் திடுக்கிடும் பல தகவல்களைக் கூறினார். அதில், 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பஞ்சாப் பேரணிக்கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது என்னை ஜி.டி. சாலையில் வைத்து சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை மே-11 தேர்தலுக்கு முன்பே அரசு என்னிடம் தெரிவித்தது' எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் இம்ரான்கான்.
ஆனால், இம்ரான்கான் மேடை சரிந்த விபத்தில் சதித்திட்டம் எதுவும் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications