மாயாவதி அசிங்கமான முகமுள்ள கொடூரமானவர்: முலாயம் கட்சி அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங்

உத்தர பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் சிங் காசிபூர் மாவட்டத்தில் உள்ள சன்ஷைன் பள்ளியில் நடந்த விழாவில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாயாவதி போன்ற அசிங்கமான பெண்ணை நீங்கள் 5 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்றால் எங்கள் கட்சித் தலைவர்களை ஒரு அரை மணிநேரம் நிச்சயம் பொறுத்துக் கொள்வீர்கள். மாயாவதி ஒரு அசிங்கமான முகம் கொண்ட கொடூரமானவர் என்றார்.
ஓம் பிரகாஷ் சிங் விழாவுக்கு தாமதாக வந்தார். அதனால் விழாவை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கூச்சலிடவே அவர்களை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவர் இப்படி மாயாவதியை தாக்கிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாயாவதி நீதிமன்றத்தை அணுகுவார் என்று கூறப்படுகிறது. மாயாவதியை சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் தாக்கிப் பேசியுள்ளது இது ஒன்றும் முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications