டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு... இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இளநிலை உதவியாளர் (62), இளநிலை உதவியாளர் (3469), தட்டச்சர் (1738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), பில்கலெக்டர் (19), வரைவாளர் (30), நில அளவர் (6) என மொத்தம் 5 ஆயிரத்து 566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 15. ஆகஸ்ட் 25-ஆம் தேதி தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகாக்கள் என மொத்தம் 258 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தரப் பதிவை வைத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து, இப்பதவிக்கான இதர விவரங்களை பதிவு செய்யலாம். நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
இது குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications