இவ்வளவு நேரமா செல்போனில் பேசுவது... தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மகள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசியபடி இருந்த தனது மகளைக் கண்டித்தார் தாயார். இதனால் அதிருப்தியடைந்த மகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம் கிராமம் மணியன்காளைபாளையத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் ஜெயந்தி. 20 வயதாகும் இவர் கடந்த 10-ம் தேதி, இரவு வீட்டில் இருந்து தன்னுடைய செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். நீண்ட நேரமாக மகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது தாயார், மகளைக் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜெயந்தி. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சம்பத் பல இடங்களிலும் மகளைத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் ஜெயந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+