53 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் முன்கூட்டியே துவங்கிய பருவமழை காலம்
டெல்லி: 53 ஆண்டுகள் கழித்து டெல்லியில் வழக்கத்தை விட 13 நாட்கள் முன்பாக பருவமழை காலம் துவங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் 53 ஆண்டுகள் கழித்து பருவமழை காலம் 13 நாட்கள் முன்னதாக நேற்று துவங்கியுள்ளது. 1960ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதிக்குள் நாடு முழுவதும் பருவமழை காலம் துவங்கியது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜூன் 16ம் தேதிக்குள் நாடு முழுவதும் பருவமழை காலம் துவங்கியுள்ளது.

நேற்று டெல்லியில் மழை பெய்யத் துவங்கியுவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 8 நாட்கள் தாமதாமகவே பருவமழை டெல்லியில் துவங்கியது. இந்த ஆண்டு வரும் 29ம் தேதி பருவமழை காலம் துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 13 நாட்கள் முன்பாக நேற்றே துவங்கிவிட்டது.
2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி பருவமழை காலம் துவங்கியது தான் மிகவும் முன்கூட்டியே மழை பெய்யத் துவங்கியதாகும். அதே போன்று 1987ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பருவமழை காலம் துவங்கியது தான் இதுவரை தாமதமாக மழை பெய்யத் துவங்கியதாகும்.












Click it and Unblock the Notifications