நரேந்திர மோடியை புகழ்ந்ததும் நிதீஷ்குமார்தான்.. இகழ்வதும் நிதீஷ்குமார்தான்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

Narendra Modi And Nitish Kumar: A Tale Of Two Friends
அகமதாபாத்/ பாட்னா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் அக்கட்சியுடனான உறவை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்டுவிட்டது. ஆனால் இதே ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான நிதிஷ்குமார்தான் முன்பு நரேந்திர மோடியை வானளாவ புகழ்ந்து தள்ளியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது.. நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தை முன்னிறுத்தி அவர் ஒரு மதச்சார்பற்றவர் என்று கூறிக் கொண்டு 17 ஆண்டுகால கூட்டணியை முறித்த இதே ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் 2004 லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் தெரிவித்த கருத்துகள் இது.."பாரதிய ஜனதா கட்சியின் புதிய முகம் நரேந்திர மோடிதான்..அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து வந்தவர். வழக்கமாக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் பிராமணர் லாபியில் இருந்து தப்பியவரும் கூட...அவரை ஒருமுறை நேரில் சந்தித்தால் அவர்மீது ஈர்ப்பு உள்ளவராக மாறிவிடுவீர்கள்... மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்... நான் அவரது ரசிகனும் கூட என்று சொன்னவர்தான் இதே நிதீஷ்குமார்.

ஆனால் பின்னர் தாமும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் தம்மை மோடியின் பரம வைரியாகவே வரித்துக் கொண்டார் நிதீஷ்குமார்...2010ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிதீஷ்குமார். ஆனால் அன்றைய நாளிதழ்களில் பீகாருக்கும் நரேந்திர மோடி வருகை தந்து நல்லாட்சி தர வேண்டும் என்று ஒரு விளம்பரம் வந்ததாலேயே அந்த விருந்தையே ரத்து செய்தார் நிதீஷ்குமார்.

நரேந்திர மோடியை மதச்சார்பற்றவர் என்று கூறுகிற இதே நிதீஷ்குமார், ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தார். அப்படியானால் பாஜக ஆதரித்த பி.ஏ.சங்மா என்ன மதச்சார்புள்ளவரா? என்ற கேள்விக்கு இதுவரை அவரிடம் எந்த பதிலும் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி மட்டுமே மதச்சார்பின்மை என்பதை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ளதா? என்பதற்கும் நிதீஷிடம் பதில் இல்லை.. ஜனாதிபதி தேர்தலில் அம்பானி குடும்பத்தினரின் விருப்பமாக பிரணாப் நிறுத்தப்பட்டார். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளத்தை ஆட்டுவிக்கும் அம்பானி குடும்பத்து எம்.பியின் விருப்பப்படியே நிதீஷும் செயல்பட்டார் என்ற உண்மை பலருக்கும் தெரியும்தி

அத்வானி,வாஜ்பாயை புகழாரம் சூட்டுகிற நிதீஷ்குமார், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் அத்வானியின் பங்களிப்பை பற்றி ஏன் பேசுவதில்லை? 2002 குஜராத் கலவரம் மிகவு கொடூரமானது என்பதை யாரும் மறுக்கப்போவது இல்லை. ஆனால் குஜராத் கலவரத்தின் போது மத்தியில் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய்தானே.. அவர் ஏன் குஜராத் அரசைக் கலைக்கவில்லை? அவர் மீது ஏன் கோபக் கணைகள் பாய்வதில்லையே? கோத்ரா கலவரத்தைவிட பீகாரின் சேனாரி படுகொலை சம்பவம் மிகவும் கொடூரமானதே..அதை ஏன் பேசுவதில்லை..

ஒருவகையில் நரேந்திர மோடியை விமர்சித்து நிதீஷ்குமார் பேசுவதும்கூட மோடிக்குத்தான் கூடுதல் நன்மை ஏற்படுத்துகிறது. நரேந்திர மோடி ஒரு டீ விற்பனையாளரின் மகனே. தமது இளம்பிராயத்தில் டீ டம்ளர்களை கழுவியவர்தான்.. நிதீஷ் பொறியியல் பட்டம் படித்த போது அவர் கல்லூரிக்குப் போகாமல் தனித் தேர்வராக பட்டம் பெற்றவர்... இப்போதும் பதவிகள் வந்தாலும் எளிமையான மனிதராக இருக்கும் மோடியைக் கண்டு நிதீஷுக்கு என்ன பொறாமை? ஒன்றே ஒன்றுதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தம்மையும் நிதீஷ்குமார் கருதிக் கொள்வதுதான்! இதனாலேயே நேற்று வரை அவரை புகழ்ந்துதள்ளிவிட்டு இன்று வைரியாக வரிந்து கட்டுகிறார் நிதீஷ்குமார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+