புதிதாக 7 வாரியத் தலைவர்களை நியமனம் செய்த ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 7 வாரியங்களுக்கான தலைவர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜே.சி.டி.பிரபாகர் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன தலைவராகவும், அருண்மொழித்தேவன் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத் தலைவராகவும், வெங்கடேஷ்பாபு தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருகை என். ரவி தமிழ்நாடு ஜவுளிக்கழகத்தின் தலைவராகவும், முனியசாமி- தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைவராகவும், செந்தில்நாதன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராகவும், ரவிச்சந்திரன் தமிழ்நாடு வேளாண் வணிக வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications