பாகிஸ்தானில் லேட்டா தண்ணீர் கொடுத்த பெண் கண்டக்டரை அறைந்த கட்சி தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேருந்தில் தாமதமாக தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த பெண் கண்டக்டரை அறைந்ததுடன் அவரை கைது செய்ய வைத்துள்ளார் பஞ்சாப் சட்டசபை உறுப்பினர் ஒருவர்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாகாண சட்டசபை உறுப்பினர் நிகாத் ஷேக். அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்டக்டரான இக்ரா நவாஸிடம் தண்ணீர் கேட்டுள்ளார். இக்ரா தண்ணீர் கொண்டு வர தாமதாமானதால் ஷேக் அவரை அறைந்துள்ளார்.
இதையடுத்து சக பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஷேக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் இக்ரா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேக் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் இக்ராவை கைது செய்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அப்பெண் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications