டெல்லியில் நரேந்திர மோடி: வாஜ்பாய், அத்வானி, ஜோஷியுடன் சந்திப்பு!

கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். இதை எதிர்க்கும் வகையில் கோவா கூட்டத்தை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் புறக்கணித்தனர். அடுத்தகட்டமாக கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் அத்வானி. இதைத் தொடர்ந்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமூக முடிவை எட்ட வைத்தது.
இந்நிலையில் திட்டக் குழுத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவை சந்திப்பதற்காக டெல்லி வந்துள்ளார் நரேந்திர மோடி. அலுவாலியாவை சந்திப்பதற்கு முன்பாக காலையில் பாஜக மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் அத்வானியின் வீட்டுக்குச் சென்ற மோடி அவரையும் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்குச் சென்று அவரையும் மோடி சந்தித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications