மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
மதுரை: மதுரையில் 30 ரவுடிகளுக்கு பயிற்சி அளித்து தமிழகம் முழுவதும் கூலிப்படையாக செயல்பட அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் சமீபகாலமாக புதிய ரவுடிகள் பலர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக, உதவியாளர்களாக இருப்பவர்கள்.
கடந்த ஜனவரி 31ம் தேதி தி.மு.க., பிரமுகர், "பொட்டு' சுரேஷ் கொலையில், கைதானவர்களில் ஐந்து பேர், நட்புக்காக ஈடுபட்டவர்கள். மீதமுள்ள பலர் கொலை செய்யத்தான் உடன் செல்கிறோம்' என, அறியாமல், சென்று சிக்கியவர்கள்.அதேசமயம், அவ்வழக்கில் சரணடைந்த சிலர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி, பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளிகள்.
இதேபோல்,சில ரவுடிகளின் கீழ், புதியவர்கள், 30 பேர் ரவுடிகளாக உருவாக்கப்பட்டிருப்பதை, போலீஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தெரியவந்துள்ளது. மதுரையை சேர்ந்த புது ரவுடிகள், கூலிப்படைகளாக, தமிழகம் முழுவதும், செயல்படுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து, ஆய்வு செய்ததில், "சீனியர்களின்' பின்புலத்தை அறியாமல், அவர்களுடன் நட்பாக இருந்து, மது, பணம் என, அதற்கு அடிமையாகி, ரவுடியாக மாறியுள்ளனர்.
இந்த புதுமுக ரவுடிகளை பராமரிக்கும் ரவுடி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர். ஏதேனும் வழக்கில் சிக்கும்போது தான், அவர்களின் பின்னணி குறித்த, தகவல் எங்களுக்கு கிடைக்கிறது. தற்போது, எந்த வழக்கு என்றாலும், புதுமுகங்களாக இருந்தால், அவர்களை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications