Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் கவலையை இலங்கைக்குத் தெரிவிப்போம்- கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

PM writes to Karunanidhi
சென்னை: இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக இந்தியாவின் கவலையை இலங்கைக்கு தெரிவிப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:

இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக தாங்கள் (கருணாநிதி) எழுதிய கடிதம் கிடைத்தது.

இது இலங்கை நாட்டின் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகள் ஆகும். எனினும், இந்த சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுவதால் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை பரிசீலித்து, இந்தியாவின் கருத்து இலங்கை அரசுக்குத் தெரிவிக்கப்படும்.

இலங்கைத் தமிழர்கள் அவர்களுடைய சொந்த நாட்டில் எல்லா உரிமைகளுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.இலங்கையில் தேசிய அளவில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் வாழ இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே உடன்படிக்கையின்படி இலங்கையில் 13-வது அரசியல் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது இலங்கையில் உள்ள சிங்கள தீவிரவாத கட்சிகள் இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாகத் தலையிட்டு, சட்டம் ரத்து செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+