ராஜ்யசபா தேர்தல்: 8 பேரின் மனுக்கள் ஏற்பு… 5 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி

அ.தி.மு.க சார்பில் மாநிங்களவை தேர்தலில் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 5வது வேட்பாளராக தங்கமுத்து என்பவரும் நிறுத்தப்பட்டிருந்தார்.
தி.மு.க சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும், தே.மு.தி.க சார்பில் இளங்கோவனும் வேட்டுமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களைத் தவிர , 5 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது, அ.தி.மு.க, திமுக, தேமுதிக, இ.கம்யூனிஸ்ட் ஆகிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 5 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நாள் ஜூன் 20ம் தேதியாகும். தேமுதிக, திமுக இடையே 1 சீட்டுக்காக போட்டி உருவாகியுள்ளதால் அதற்கான தேர்தல் இம்மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications