வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஆறுதல் டானிக் கொடுத்த ஹர்பஜன்

பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கும், கன மழையும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பலர் வெள்ளத்தில்சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோசிமாத் என்ற இடத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்.
அங்கு சிக்கியுள்ள பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். பத்திரமாக வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் உள்ளனர். நேற்று அவர்களை ஹர்பஜன் சிங் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுடன் பேசினார். அவர்களை அமைதிப்படுத்தினார்.தைரியமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஹர்பஜன் சிங் தங்களிடம் வந்து சகஜமாக பேசியதால் பக்தர்களும் சற்றே உற்சாகமடைந்தனர்.
ஜோசிமாத்தில் உள்ள இந்திய திபெத்திய எல்லைப் போலீஸ் முகாமில் தற்போது ஹர்பஜன் சிங் தஞ்சமடைந்து தங்கியுள்ளார். அவர் ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு செல்வதற்காக வந்து மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.












Click it and Unblock the Notifications