இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர்- ஜூலை 4ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
அகமதாபாத்: இளம் பெண் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20004ம் ஆண்டு அகமதாபாத் நகருக்கு வெளியே வைத்து இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட ஐந்து பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய ஜூலை 4ம் தேதி வரை கெடு விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இஷ்ரத் ஜகானும், அவருடன் இருந்தவர்களும் ஏன் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும் முயற்சியில் சிபிஐ தீவிரம் காட்டுமாறும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வதில் காலதாமதம் கூடாது என்றும் கோர்ட் எச்சரித்துள்ளது.
இஷ்ரத் வழக்கில் நேற்றுதான் ஐபி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் சிபிஐ அதிகாரிகளால் 2வதுமுறையாக விசாரிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications