ராஜ்யசபா தேர்தலில் யாருக்கு ஆதரவு.... நாளைக்கு சொல்றோம்: ஞானதேசிகன்

இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் 42வது பிறந்தநாள். இதனை தமிழகத்தில் பொதுமக்கள் சேவை தினமாக கொண்டாடி வருகின்றனர் தமிழக காங்கிரஸார்.
பிறந்த நாள் விழாவின் சிறப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை துவக்கி வைத்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
பின்னர், சத்தியமூர்த்தி பவனில் வைத்து நிருபர்களைச் சந்தித்த ஞானதேசிகன் கூறியதாவது, ‘ராகுல்காந்தி பிறந்த நாளை பொது மக்கள் சேவை தினமாக கொண்டாடுகிறோம். மேல்சபை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டு விட்டதா? என்று கேட்டபோது, தே.மு.தி.க. தரப்பில் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்ததையும், தி.மு.க. தரப்பில் ஆதரவு கேட்டதையும் கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். யாருக்கு ஆதரவு என்பது இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications