நாமக்கல்லில் பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் ராணி
நாமக்கல்: நாமக்கல்லில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசயம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் கபிலர்மலையை அடுத்து உள்ள செம்மடையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். அவரது மகன் ஆனந்தன்(39). மோட்டார் மெக்கானிக். அவர் நாய், பூனை, வாத்து உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வரும் ராணி என்ற நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது.
அவர் வளர்க்கும் பூனையும் குட்டிகள் போட்டுள்ளது. வேங்கை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள குட்டிப் பூனையின் தாய் அடிக்கடி வெளியே சென்றுவிடுகிறது. இதனால் வேங்கை நாய் ராணியிடம் பால் குடித்து வருகிறது. நாயும் வேங்கையை விரட்டாமல் பால் கொடுக்கிறது.
பூனைக் குட்டிக்கு நாய் பால் கொடுப்பதை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து அதிசயிக்கின்றனர். ஆனந்தன் வளர்க்கும் நாய்களுக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வது என்றால் பிரியமாம். அவர் எப்பொழுது இரு சக்கர வாகனத்தை எடுத்தாலும் விக்கி என்ற நாய் பின்னால் வந்து அமர்ந்து கொள்ளுமாம்.












Click it and Unblock the Notifications