ட்ரெயின் சாவிய மட்டும் திருடி என்னடா பண்ணுவீங்க...: போலீஸ் விசாரணை
சென்னை: சமீபத்தில் ரயில் இயக்குவதற்கான பெட்டி ஒன்று தாம்பரத்தில் காணாமல் போனது. குற்றவாளியைக் கைது செய்து, பெட்டியை மீட்ட போலீசார், அதில் ரயிலின் சாவி மட்டும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஞாயிறன்று, மின்சார ரயில்களை இயக்குவதற்கான சாவி மற்றும் கருவிகள் அடங்கிய பெட்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து காணாமல் போனது. பெட்டியைத் திருடியவர்கள் பற்றிய விவரத்தை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டனர்.
விசாரணையில், பெட்டியைத் திருடியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தெரிய வந்தது. ரமேஷைக் கைது செய்து, அவரிடமிருந்து பெட்டியை மீட்டனர் போலீசார். பெட்டியை சோதனைச் செய்து பார்த்ததில், பெட்டியில் மின்சார ரயிலின் சாவியைத் தவிர மற்ற அனைத்தும் சரியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
காணாமல் போன மின்சார ரயிலின் சாவி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications