பற்றி எரிந்த காதல் ‘தீ’: பலியான காதல் ஜோடிகள்: ஸ்ரீபெரும்புதூரில் பரிதாபம்
ஸ்ரீபெரும்புதூர்: உடலில் தீ வைத்துக் கொண்ட காதலன், தனது 13 வயது காதலியையும் கட்டிப் பிடித்ததால், தீயின் கோர நாக்குகளுக்கு இருவரும் பலியாயினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வி.ஆர்.பி. சத்திரத்தை சேர்ந்த மேகநாதன், பேல் பூரி கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தினக்கூலியாக வேலை பார்த்து வரும் மோகன் என்ற இளைஞர், மேகநாதனின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளார்.
மோகனின் காதலுக்கு சம்மதம் சொன்ன ஐஸ்வர்யா, பெற்றோரை எதிர்த்து இருமுறை காதலனுடன் வீட்டை விட்டு ஓடி உள்ளார். ஆனால், ஏனோ திரும்பி சில தினங்களிலேயே வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மேகநாதன் மகளைக் கடத்தியதாக மோகன் மீது போலீசில் புகார் செய்தார்.
விசாரணைக்காக மகளை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் சென்று கொண்டிருந்த மேகநாதனை வழிமறித்த மோகன், கையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். உடலில் பற்றி எரிந்த தீயுடன் திடீரென காதலி ஐஸ்வர்யாவைக் கட்டிப் பிடித்தார் மோகன்.
காதல் ஜோடிகள் தீயில் கருகினர். இருவரையும் உறவினர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்றிரவே, மோகன் பலியானார். சிகிச்சை பலனின்றி மோகன் இறந்த 5 தினங்களுக்குப் பிறகு நேற்று ஐஸ்வர்யாவும் பரிதாபமாக இறந்தார்.
இளம் காதல் ஜோடிகள், தெருவில் தீ வைத்துக் கொண்டு பலியான சம்பவத்தால், அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications