லோக்சபா தேர்தல் வியூகம்... எதியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் மோடி!

இந்நிலையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமையகத்துக்கு நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்ல இருக்கிறார். அப்போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா தளத்தின் தலைவருமான எதியூரப்பாவை நேரில் சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்புக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
எதியூரப்பா சந்திப்பு ஏன்?
தென்னிந்தியாவிலேயே பாஜகவை முதன் முதலில் மாநில ஆட்சியைக் கைப்பற்ற வைத்தவர் எதியூரப்பா. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தாலும் கூட அது உட்கட்சி மோதல்களால் சிதைந்து போனது. அண்மையில் முடிவடைந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அக்கட்சியிலிருந்து வெளியேறிய எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம், ஸ்ரீராமுலு கட்சி மூன்றாக சிதைந்து போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சி எளிதாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. லோக்சபா தேர்தலை பாஜக, நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்வதால் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடியின் நண்பரான அமித்ஷா தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
எதியூரப்பாவுடன் உடன்பாடு
இதேபோல்தான் லோக்சபா தேர்தலுக்காக நாக்பூரில் எதியூரப்பா- மோடி சந்திப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக் கொடுத்து தேர்தலை எதிர்கொள்வது என்ற உடன்பாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications