பெங்களூரில் ரங் தே அமைப்பின் 'எ வாக் வித் எ சேஞ்ச்மேக்கர்'

Subscribe to Oneindia Tamil

Rang De's 'A Walk with a Changemaker'
பெங்களூர்: ரங் தே அமைப்பின் பெங்களூர் பிரிவின் சார்பில் மாற்றத்தை ஏற்படுத்திய உஷா ராஜகோபாலனுடன் 'எ வாக் வித் எ சேஞ்ச்மேக்கர்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரங் தே அமைப்பின் பெங்களூர் பிரிவு 'எ வாக் வித் எ சேஞ்ச்மேக்கர்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 23ம் தேதி புட்டனஹள்ளி ஏரியில் நடக்கும் நிகழ்ச்சியில் புட்டனஹள்ளி ஏரியை காக்க பெரு முயற்சி செய்து வெற்றி பெற்ற எழுத்தாளர் உஷா ராஜகோபாலனுடன் நடைபயணம் செய்யலாம். ஒரு சாதாரண குடிமகன் நினைத்தால் கூட மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பெங்களூர் ஜே.பி. நகரில் 13 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள புட்டனஹள்ளி ஏரியை பாதுகாக்க புட்டனஹள்ளி ஏரி பாதுகாப்பு அறக்கட்டளை (பிஎன்எல்ஐடி) அமைக்கப்பட்டது. எழுத்தாளர் உஷா ராஜகோபாலன், ஆர்த்தி, பிரசன்னா வைனதியா, பொறியாளர் ஓ.பி.ராமசாமி ஆகியோர் இணைந்து இந்த அறக்கட்டளையை அமைத்தனர்.

இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் அந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பை இந்த அமைப்பிடமே பெங்களூர் மாநகராட்சி கொடுத்தது. வரும் 23ம் தேதி நிகழ்ச்சியின்போது உஷா ஏரியை பராமரிக்க தாங்கள் பட்ட கஷ்டம் மற்றும் அடைந்த வெற்றியை பற்றி பேசுகிறார்.

ரங் தே அமைப்பின் பெங்களூர் பிரிவு கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி துவங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏழைகளுக்கு குறு கடன் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+