சாலை விபத்தில் மாணவர்கள் பலி: சீமான் இரங்கல்
சென்னை: பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 மாணவர்களும், வாகன ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அனைவரும் 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதைக்கிறது.
மாணவர்களை பறிகொடுத்துத் தவிக்கிற குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவச பேருந்து பயண அட்டைகளை (பஸ் பாஸ்) அளித்துள்ளது. ஆனால், எங்கெல்லாம் மாணவர்கள் அரசு பேருந்துக்காக திரண்டு நிற்கின்றனரோ அங்கு நிறுத்தாமல் அரசு பேருந்துகள் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் தான் மாணவர்கள் பள்ளிக் குச்செல்ல ஷேர் ஆட்டோக்களிலும், இப்படிப்பட்ட வாகனங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications