For Daily Alerts
Just In
தானேவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: 10 பேர் பலி, 14 பேர் காயம்
தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் உள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 2.30 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. 35 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் 9 குடும்பங்கள் வசித்து வந்தன.
இது குறித்து தகவல் அறிந்த மும்பை மற்றும் தானே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 2 மாத பெண் குழந்தையும் அடக்கம்.
தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதே மும்ப்ரா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
10 people including two minors were killed after a three-storey building collapsed in the wee hours in Mumbra area of Thane district. So far 14 people a 2-month old girl have been rescued.
Story first published: Friday, June 21, 2013, 14:02 [IST]