For Daily Alerts
Just In
உத்தரகண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது: விமானி மீட்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படை மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று இன்று மாலை விபத்துக்குள்ளானது.
நல்ல வேளையாக அதில் பயணிகள் யாரும் இல்லை. விபத்து நடந்தபோது அந்த வழியாகச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தனியார் விமானத்தில் இருந்த விமானியை மீட்டு கேதர்நாத்தின் தென் பகுதியில் உள்ள ஹெலிபேடுக்கு அழைத்து வந்தது. தற்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Comments
English summary
A private chopper involved in rescuing stranded people has crashed in Uttarakhand.
Story first published: Friday, June 21, 2013, 17:21 [IST]