சென்னைலிருந்து மானாமதுரைக்கு புதிய ரயில்... பெயர் ‘சிலம்பு எக்ஸ்பிரஸ்’
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து மனாமதுரைக்கு புதிய ரயிலை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைக்கின்றார்.
2013-14-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் எழும்பூர்- மானாமதுரை வாராந்திர ரெயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எழும்பூர்- மானாமதுரை இடையே விடப்படும் இந்த ரெயிலின் பெயர் சிலம்பு எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருந்து வாரத்தில் இரு நாட்கள் (புதன், மற்றும் சனிக்கிழமை) இரவு 8.20 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.
இதே போல் மானாமதுரையில் இருந்து (எண் 16182) ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் நடைபெறுகிறது.
இதே போல், சென்னை எழும்பூரில் இருந்து, வேளாங்கண்ணிக்கு மற்றொரு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.