உத்தகாண்ட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி! வெள்ளம் பாதித்த பகுதிகளை பர்வையிடுகிறார்!!

உத்தர்காண்ட் வெள்ளத்தால் இமயமலை யாத்திரை சென்ற 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் வெள்ள பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டனர். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் இன்று பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலையில் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரசார குழுத் தலைவருமான நரேந்திர மோடி நேற்று இரவு உத்தர்காண்ட் மாநிலத் தலைநகர் டேராடூன் சென்றடைந்தார். அவர் இன்று அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை நேரில் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். நேற்று டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, மிகவும் துயரமான இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் உத்தர்காண்ட் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் குஜராத் மாநிலத்தவரை மீட்டு அழைத்துச் செல்ல 2 ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானங்களை அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications