’இமயமலை சுனாமி’ நிவாரண நிதிக்கு ரூ 13 லட்சம் கொடுக்கும் திகார் ஜெயில்வாசிகள்
டெல்லி: உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திகார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க திட்டமிட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், ‘இமயமலை சுனாமி' என அழைக்கப்படும், கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு உதவ, நிவாரண நிதியாக ரூ.1000 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.

மேலும், பொதுமக்களும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில், பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், திகார் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறையின் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறியதாவது, "உத்தரகாண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறையில் உள்ள கைதிகள் 5 லட்சம் வசூலித்துள்ளனர். இதேபோல் சிறை ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வசூலாகும். மொத்தம் 13 லட்சம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக, முதல்வர் ஷீலா தீட்சித்திடம் ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications