Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்.எல்.சி. பங்குகள் விற்பனை- மதிமுக, மார்க்சிஸ்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சியின் 5% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச்சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் உண்மையான நோக்கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான். மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும்.

நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரÞ கூட்டணி அரசு, 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி, இன்னும் பல்வேறு ஊழல்களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக்கொண்டிருக்கிறது.

என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில். என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10% பங்குகளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+