மான் வேட்டையாடிய 5 பேருக்கு ரூ. 1,15,000 அபராதம்
தர்மபுரி: தர்மபுரி வனப்பகுதியில் மான்வேட்டையாடிய 5 பேருக்கு 1லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் மேற்பார்வையில், மொரப்பூர் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர்கள் வேடியப்பன், செல்வராஜ், வெங்கடேசன் ஆகியோர் நேற்று முன்தினம் கீழ் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, புதர்கள் நிறைந்த ஒரு நீர் நிலைக்கு அருகில், இரண்டு பேர் மான் கறியை வெட்டி பங்கிட்டு கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அரூர் அருகில் உள்ள சோலைக்கொட்டாய் சமத்துவபுரத்தை சேர்ந்த கணபதி, வயது-23, மற்றும் அதே பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி, வயது-35, என்பது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். மான் வேட்டையாடிய இருவருக்கும் தலா, 20 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இதர் போல, கவுரமலை காப்புக்காட்டில் வனத்துறையின் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மான் கறியை மூன்று பேர் சமைத்து கொண்டிருந்தனர். அவர்கள் இவர்கள் மூவருக்கும் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அவர்களிடமிருந்து மான் கறி மற்றும் சமையல் செய்யப்பட்ட குழம்பு ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications