2012ல் கேரளாவில் ‘பப்ளிக்கா’ தம் அடிச்சு பைன் கட்டினவங்க 77,000 பேராம்....
திருவனந்தபுரம்: சென்ற ஆண்டு கேரளாவில் மட்டும் பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக 77 ஆயிரம் பேர் அபராதம்கட்டியுள்ளார்களாம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், பொது இடங்களில் புகை பிடிப்போரை பிடித்து அபராதம் விதிக்கும் சட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், இச்சட்டத்தை மாநிலங்கள் வெவ்வேறு நடை முறைகளில் செயல் படுத்தி வருகிறது.
கேரளாவில் சென்ற ஆண்டு சட்டத்தை மீறி, பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் பற்றிய விவரத்தை அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

மக்கள் நலனே முக்கியம்....
பொது இடங்களில் புகை பிடிப்பதன் மூலம், அருகில் இருக்கும் சம்பந்தமில்லாத அந்நியர்களும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாலேயே இச்சட்டம் அமல் படுத்தப்பட்டது.

கேரளாவில்ல் அபராதம்...
2012ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 77 ஆயிரத்து 288 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் அதிகம்...
குறிப்பாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் சட்டத்தை மதிக்காமல் பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக 26 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ரயில் நிலையத்தில்...
கேரள மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில், ரயில்கள் மற்றும் ரயில் நிலைய நடைமேடைகளில் புகைபிடித்த குற்றத்திற்காக 226 பேருக்கு ரெயில்வே போலீசார் அபராதம் விதித்துள்ளனராம்.

சட்டத்தை மீறுபவர்கள் அதிகம்...
ஆனால், இதுஹ் 2011ம் ஆண்டைக்காட்டிலும் அதிகம் என அமைச்சர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு 54,980 பேரிடம் மட்டுமே பொது இடங்களில் புகை பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications