உத்தர்காண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது- பலி் எண்ணிக்கை 20 ஆனது!

உத்தர்காண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் மட்டுமின்றி, இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் ரகத் என்று பெயரிடப்பட்டுள்ள மீட்பு பணியில் விமானப்படைக்கு சொந்தமான 45 விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதில் ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று முன்தினம் மீண்டும் மழை பெய்ததால் விமானப்படை மீட்புப்பணியை நிறுத்தி வைத்திருந்தது. நேற்று வானம் தெளிவாக இருந்ததால் விமானப்படை மீண்டும் மீட்பு பணியை தொடங்கியது. ஆனால் பகலில் வானிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த ஹெலிகாப்டர் கவுச்சா என்ற இடத்தில் இருந்து குப்த்காசி, கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது. 2 முறை பாதுகாப்பாக சென்று விட்டு திரும்பிய அந்த விமானம் 3 வது முறையாக கேதார்நாத் சென்று விட்டு திரும்பும் வழியில் கெளரிகுண்ட் என்ற இடம் அருகே திடீரென விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் முதலில் 8 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பின்னர் பயணிகள், விமானப் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உட்பட 20 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம் பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் இரங்கல்
மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications