ஒகேனக்கல் வந்தது காவிரி நீர்: கபிணி அணையில் இருந்து 25000 கன அடி நீர் திறப்பு…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
கபிணி அணை நிறைய இன்னும் 5 அடிகளே பாக்கியுள்ளன. அணைக்கு தற்போது 28,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கபிணி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையும் இப்போது வேகமாக நிரம்பி வருகிறது. இப்போது அணையின் கொள்ளளவு 81 அடியாக உள்ளது. இந்த அணை ஜூலை கடைசியில்தான் நிரம்பும் என்று சுறப்படுகிறது.
கபிணி அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய உதவிப் பொறியாளர் அலுவலகம் மூலம் காவிரியில் நீர்வரத்து குறித்து அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில், நீர்வரத்து 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 கனஅடி வரை இருந்ததாக அதன் பணியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மூன்று டி.எம்.சி அளவிற்கு குறைந்துள்ளது. எனினும், கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications