காப்பி போடுற மாதிரி... வீட்டில் சாராயம் காய்ச்சிய கணவன், மனைவி கைது
மேச்சேரி: மேச்சேரியில் வீட்டில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் சமையல் செய்வது போல் பாவனையில் சாராயம் காய்ச்சியுள்ளனர் மேச்சேரியைச் கொசவன் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்த விசுவநாதன். அக்கம் பக்கத்தினர் அளித்த ரகசியத்தகவலின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) முரளி, மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் ராதாகிருஷ்ணன், வேணுகோபால், சுப்ரமணியம் மற்றும் ஏட்டுகள் திடீரென அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது விசுவநாதன் வீட்டில், 3 மற்றும் 20 லிட்டர் கேன்களில் சாராயம் ஊறல் போடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 4 லிட்டர் சாராயமும் இருந்ததும் தெரிய வந்தது. சாராயம் காய்ச்சுவது உதுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விசுவநாதன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணியை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விசுவநாதன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, ‘கடந்த 6 மாதமாக நாங்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி அதை அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பார்க்கும் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தோம். மேலும் ஸ்டவ் அடுப்பு, விறகு அடுப்பில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சினோம்.
செல்போன் மூலம் அழைத்து சப்ளை செய்து வந்தோம். தெரிந்த நபர்களுக்கு மட்டும் தான் விற்பனை செய்தோம். தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யமாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications