காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தீக்குளித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் ஸ்ரீநகர் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

வீரமரணம் எய்திய அவ்வீரர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணத் தொகை அளித்த போதும், அவர்களின் குடும்பத்தினர் இன்னும் சோகத்திலிருந்து மீளவில்லை. அதன் எதிரொலியாக வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரரான ஆதித்யா நந்தியும் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் செய்தி கேட்டதும் ஆதித்யாவின் மனைவி பினு நந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கணவரின் திடீர் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பினு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பினுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+