4வதும் பொண்ணா?: பிறந்த குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற தந்தை கைது
தர்மபுரி: பென்னாகரம் அருகே பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எரங்காடு காட்டு கொல்லையைச் சேர்ந்தவர் மாதேஷ். அவர் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கும் மாலா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. அவர்களுக்கு சந்தியா (8), சாதனா (7), காவியா (2) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மாலா கடந்த 2ம் தேதி 4வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பிய மாதேஷ் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து அவர் மாலாவிடம் தகராறு செய்தார். பின்னர் மாலாவிடம் கோபித்துக் கொண்டு பெங்களூருக்கு கிளம்பிவிட்டார்.
பின்னர் ஊர் திரும்பிய அவர் 4வதாக பிறந்த குழந்தை திடீர் என்று இறந்துவிட்டது என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். போலீசாருக்கு தெரிவிக்காமலேயே குழந்தையை புதைத்துவிட்டனர். இந்நிலையில் அந்த குழந்தை இறந்ததில் மர்மம் இருப்பதாக பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மாதேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4வதும் பெண்ணாக பிறந்ததால் அதை கள்ளிப்பால் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்தனர். பின்னர் குழந்தையின் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரதே பரிசேதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications