திமுக விரட்டினாலும் கூட்டணியை விட்டு போகமாட்டோம்: திருமாவளவன்
எங்களை கூட்டணியில் இருந்து வெளியே போகச்சொல்லி திமுக சொன்னால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம் திமுகவுடன் தான் இருப்போம். ஏனெனில் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது நாங்கள் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது:
ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எங்களை திமுக அணியில் இருந்து பிரிக்க நினைக்கின்றனர். எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் தி.மு.க.வுடன்தான் இருப்போம்.
நரேந்திர மோடி பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நரேந்திரமோடியை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நடை பெற உள்ள டெல்லி மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற கனிமொழி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications