உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து…
கேதார்நாத்: உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ஹெலிகாப்டர், இன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.
கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கிய யாத்ரீகர்களை மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, ஹர்சில் என்ற இடத்தில் தரையிறங்கும்போதே இன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி சேதமடைந்ததாக விமானப்படை செய்தி தொடர்பாளர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தானர்தான் இதேப்போன்று உத்தரகாண்டில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள். அதன் தாக்கம் மறைவதற்குள் மீண்டும் மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அனைவரையும் மீட்போம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்கும் வரை ராணுவம் அங்கிருந்து வெளியேறாது என்று ராணுவ தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். உத்தர்கண்டில் மீட்பு பணிகளின் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகின்றன. டேராடூனில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி, ராணுவ தளபதி பிக்ரம் சிங், உத்தர்கண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுணா மற்றும் உயரதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த ராணுவத் தளபதி, மீட்பு பணிகளில் 8 ஆயிரத்து 500 ராணுவ வீரரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தவிர இந்தோ-திபெத் படையினர், விமான படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீட்பு பணிகளில் ராணுவத்தினர் சிறப்பாக ஈடுபட்டுள்ளாக பாராட்டு தெரிவித்த பிக்ரம் சிங், வானிலையை பொறுத்தே மீட்பு பணிகளை நிறைவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications