தேமுதிக தொழிற் சங்க 8வது ஆண்டு விழா: விஜயகாந்த் மிஸ்ஸிங்!
சென்னை: தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் 8வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடகழகத்தின் தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரன் தொழிற்சங்க பேரவைக் கொடியேற்றி,இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரவை செயலாளர்எம். சௌந்திரபாண்டியன், பேரவை பொருளாளர் எஸ். முஜிபுர் ரகுமான், துணைதலைவர்கள் டி.கே. விஜய் வெங்கடேஷ், இரா.சு. சேகர், எஸ். மாதவன், துணைசெயலாளர்கள் எம். ஈஸ்வரன், பி. வேணுராம், த. ஆதிலிங்க பெருமாள் மற்றும்தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், கழக சட்டமன்றஉறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்,பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மகளிர் அணியினர்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications