அமெரிக்க சிறுமி பாலியல் வழக்கு: ஊட்டி பாதிரியாரை கைது செய்தது சரியே- ஹைகோர்ட்
சென்னை: அமெரிக்காவில் பாதிரியாராக இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவான வழக்கில், ஊட்டி பாதிரியாரை டெல்லி போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஊட்டியை சேர்ந்தவரான பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில், 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பாதிரியாராக பணியாற்றினார். அப்போது, அங்கு ஜெயபால் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஜெயபால் மீது அமெரிக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த ஜெயபால், தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்தார். ஆனால், மீண்டும் அமெரிக்கா திரும்பிச் செல்லவில்லை. இதனால், ஜெயபாலை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்க போலீஸ் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தது.
இந்த வழக்கின் உண்மை நிலையை ஆராயும் படி டெல்லி மாநகர தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில், ஜெயபாலை கைது செய்ய உத்தரவிட்டார் டெல்லி தலைமை மாஜிஸ்திரேட்டு.
கோர்ட்டு உத்தரவின் பேரில் கைதான ஜெயபாலின் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் பழனிவேல் ஜெயபாலின் சகோதரி புஷ்பாவதி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
புஷ்பவதி தாக்கல் செய்த மனுவில், ‘2012-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி என் சகோதரரை கைது செய்த டெல்லி போலீசார் 19-ந் தேதிதான் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாததால், என் சகோதரரின் கைதும், இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதும் சட்டவிரோதமாகும். எனவே அவரை இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவிக்கவேண்டும்‘ எனக் தெரிவித்திருந்தார்.
புஷ்பவதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் பின்வருமாறு தெரிவித்துள்ளதாவது, ‘ கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசப் பழனிவேல் ஜெயபாலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து டெல்லி கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஜோசப் பழனிவேல் ஜெயபாலுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே மனுதாரரின் சகோதரருக்கு எதிராக டெல்லி கோர்ட்டு பிறப்பித்துள்ள பிடிவாரண்ட், அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்த நடவடிக்கை ஆகியவை சட்டவிரோதம் கிடையாது என்று முடிவு செய்கிறோம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications