Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூலை 1 முதல் பொதிகை ரயில் நேரம் மாற்றம்…

Subscribe to Oneindia Tamil

Timings, frequency of trains change from July 1
சென்னை: சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்டிரல்- திருப்பதி, ரயில்கள் உள்பட பல்வேறு ரயில்களின் நேரங்கள் ஜூலை 1ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை சென்டிரல் ரயில்கள்

மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி பிற்பகல் 2.10 இயக்கப்பட உள்ளது.

பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படுகிறது.

பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது.

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- பூரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி மாலை 4.20 இயக்கப்படுகிறது.

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு இயக்கப்படுகிறது.

மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட பெங்களூர் சிட்டி-தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.50 மணிக்கு வந்து சேரும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து சேரும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயிகளின் வருகை

அதிகாலை 3.10 மணிக்கு வரும் தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2.55 மணிக்கு வந்து சேரும்.

காலை 9.05 மணிக்கு வரும் ஜோலார்பேட்டை- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.15 மணிக்கு வந்தடைகிறது.

காலை 10.30 மணிக்கு மணிக்கு வரும் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.30 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கு வரும் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.40 மணிக்கும் வந்து சேரும்.

பிற்பகல் 3.50 மணிக்கு வரும் பெங்களூர் சிட்டி- தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.55 மணிக்கும், இரவு 8.35 மணிக்கு வரும் திருப்பதி- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.35 மணிக்கும் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:12605/12606) காரைக்குடி வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்(16877/16878) திருச்சியுடன் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(16127/16128) மதுரை வரை இணைக்கப்படும் என்றும் ஒரு பகுதி ரயில்(16129/16130) தூத்துக்குடி வரை செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதே போன்று மங்களூரில் இருந்து திருச்சி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(12653/12654) புதுச்சேரி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏலகிரி எக்ஸ்பிரஸ்

இந்த தூரம் நீட்டிப்பு மற்றும் குறைப்பு சேவை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரலில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ்(16089/16090) வருகிற 1ஆம் தேதி முதல் ஜோலார்ப்பேட்டை வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+