விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஆம் ஆத்மி வேட்பாளர்: சதி என்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் சீமாபுரி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் சந்தோஷ் கோலி. நேற்று அவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் என்பருடன் பைக்கில் கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்திராபுரம் பகுதி கௌஷம்பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே செல்கையில் வேகமாக வந்த கார் ஒன்று பைக்கை பின்னால் இருந்து மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.
இதில் கோலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
எங்களிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் இது விபத்து போன்று தோன்றவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
போலீசார் கார் டிரைவர் மீது கொலை முயற்சி மற்றும் தாறுமாறாக வண்டியை ஓட்டியது ஆகிய குற்றங்கள் சுமத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications