மார்ட்டின் கட்டடங்களுக்கு சீல் வைத்த கோவை மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil

இன்றுகாலை இந்த சீல் வைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஓஹோவென வலம் வந்தவர் கோவையைச் சேர்ந்த மார்ட்டின். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது சரமாரியாக பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. கைதும் ஆனார்.
இதை சமாளிக்க அவரது மனைவி பாரிவேந்தரின் கட்சியில் சேர்ந்து கூடப் பார்த்தார். இருப்பினும் மார்ட்டின் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இந்த நிலையில் கோவை, கிராஸ்கட் வீதியில் உள்ள 4 மாடி கொண்ட நான்கு கட்டிடங்களுக்கு அதிகாரிகள் திடீரென சீல் வைத்து மூடினர். முறையான அனுமதி இல்லாதது, அனுமதி பெறாமல் கட்டியது. விதிமீறல் ஆகிய புகார்களின் பேரில் இந்த நடவடிக்கையாம்.












Click it and Unblock the Notifications