கோர்ட்டுக்குள் விஜயகாந்த் வக்கீல்கள், பிபி மோதல்... கோபத்தில் வெளியேறினார் நீதிபதி

விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விஜயகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது கோர்ட்டுக்குள் தேமுதிக தொண்டர்கள் திமுதிமுவென குவிந்து விட்டனர். இதையடுத்து அதை அரசு வழக்கறிஞர் ராஜசேகர் கண்டித்துப் பேசினார். இதனால் கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல்கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் அவர் காயமடைந்தார். மேலும் அரசு வக்கீலின் மூக்குக்கண்ணாடியும் உடைந்தது.
மேலும் பதில் தாக்குதலில் விஜயகாந்த்தின் உதவியாளரான கண்ணன் என்பவரும் தாக்கப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி கோபத்துடன் கிளம்பிச் சென்று விட்டார். இதனால் கோர்ட்டில் பதட்டம் நிலவியது. சம்பவம் நடந்தபோது விஜயகாந்த் அங்கு இல்லை. கையெழுத்துப் போட்டு விட்டுப் போய் விட்டார். அதன் பிறகுதான் அடிதடி மூண்டது.












Click it and Unblock the Notifications