அழிவுக்குப் பிறகுதானே வருகிறது அறிவு.. ஆற்றங்கரையோரம் கட்டடம் கட்ட உத்தரகாண்ட் தடை
டேராடூன்: உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவுக்குப் பின்னர் அந்த மாநில அரசு விழித்தெழுந்துள்ளது. ஆற்றங்கரையோரமாக கட்டடங்கள் கட்ட தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாநில முதல்வர் விஜய் பகுகுணா உத்தரவிட்டுள்ளார்.
கட்டட கட்டுமானங்களைக் கண்காணிக்கவும் புதிய அமைப்பு ஒன்றை விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

ஆற்றங்கரையோரம் எந்தவிதமான கட்டுமானத்திற்கும் இனி இடமில்லை. அவற்றுக்கு அனுமதி தர மாட்டோம் என்றார் பகுகுணா.
ஆற்றங்கரையோரமாக எக்குத்தப்பாக ஏராளமான கட்டடங்களைக் கட்டிக் குவித்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் சீரழிவை சந்தித்துள்ளது உத்தரகாண்ட் மாநிலம். பல நூறு கிராமங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை பெரிய சீரழிவுக்குப் பின்னர் உத்தரகாண்ட் அரசு கண் விழித்திருப்பது ஏதோ ஒரு பழைய பழமொழியை நினைவுபடுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications