அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங்... அனைவரும் ஒரே மேடையில்: மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: சமீபத்திய அரசியல் களேபரங்களுக்கு அடுத்து பா.ஜ.க தலைவர்களான அத்வானி, மோடி, மற்றும் ராஜ்நாத் சிங் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டத்தில், இணை அமைச்சராக பதவி வகித்த குஜராத்தைச் சேர்ந்த பாவ்னா சிக்காலியா கடந்த மாதம் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பாஜக சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

குஜராத் மாநிலம், ஜூனகத் பகுதியில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி என மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

மூன்று தலைவர்களையும் முதன் முறையாக ஒரே மேடையில் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் அதிக உற்சாகம் அடைந்தனர்.

சென்ற மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அத்வானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+