40 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி: ஸ்டாலின் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ஆளும் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்பற்றாக்குறை முழுமையாக போக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார். இருப்பினும், இதுவரை மின் தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு கூறினார்.












Click it and Unblock the Notifications